நான்….!

தனிமையின்

சிறையில்

தவிர்க்க முடியாக்

காவலன்

நான்

ஆகினேன்!

கவிதையின்

படியால்

காயங்கள் ஆறிடக்

கவி ஒன்று

தினம்

பாடினேன்!

வயல்வெளி

நடுவிலும் – சிறு

புல்வெளி

நான்

ஆகிறேன்!

நிலவொளி வரும்

வரையிலும் – பெறு

கனவினைத்

தினம்

சுமக்கிறேன்!

மனம்

என்னும்

மாய

ஊஞ்சலில்

மரக்கிளையும்

நானே

ஆகினேன்!

கணம் எனும்

நொடிப் பொழுதிலே

காற்று வீசிட

அசைந்தாடினேன்!

Published by Aaru

Poetry writer

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started